ந ாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி தின நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேசிய பேச்சை, அதன் அதிகாரப்பூர்வ மான அறிவிப்புகள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். 2023 அக்டோபர் 24 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசிய பேச்சு, ஆர்எஸ்எஸ்-இன் நாசகர உலகக் கண்ணோட்டத் தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை முழுமையாக அடையாளப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.
இந்தத் தடவை அவர் ஆற்றிய உரையின்போது, “இந்தியாவை நம்முடைய ஒரு மாபெரும் வல்லர சாக மாற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடு பட்டுக்கொண்டிருக்கும் பாஜக மற்றும் அதன் அர சாங்கத்தின் பின்னே, ஆர்எஸ்எஸ்-இன் அனைத்து அணிகளும் அணிதிரள வேண்டும்,” என்று அவர் அறைகூவல் விடுத்திருப்பது, வரவிருக்கும் மக்கள வைத் தேர்தலுக்கு முன் தங்கள் தொண்டர்கள் அனைவரையும் முடுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே என்பது தெளிவாகிறது.
பகவத் வரையும் கருப்புச் சித்திரம்
இவ்வாறு பேசியுள்ள மோகன் பகவத் மேலும், “இந்தியா முன்னேறுவதை விரும்பாத சிலர் ‘ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகியிருப்பதாக’வும் கூறி இருக்கிறார். “அவர்கள் சமூகத்தில் பேதங்களை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றும், “தற்போது ஆக்கப்பூர்வமாகவுள்ள கட்ட மைப்பை உடைக்கவும், அவர்களைத் தனித்தனியே பிரித்து மோதலை உருவாக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
“இந்த நாசகர சக்திகளை” அவர் ‘கலாச்சார மார்க்சிஸ்ட்டுகள்’ (‘cultural Marxists’) அல்லது ‘விழித்தெழு’ (‘woke’) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது ‘விழிப்படைந்திருக்கும்’ (‘awakened ones’) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வர்ணித்தி ருக்கிறார். “அவர்கள் செயல்படும் முறை (modus operandi) என்பது கல்வி, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக சூழலை குழப்பத்திற்கும், ஊழலுக்கும் உட்படுத்தி, ஊடகங்களையும், கல்வித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதென்ப தாகும்,” என்றுகூறி இந்த சக்திகள் எப்படிச் செயல்படு கின்றன என்பதற்கு ஒரு கருப்புச் சித்திரத்தையும் வரைந்திருக்கிறார்.
மோகன் பகவத் இவ்வாறு ‘கலாச்சார மார்க்சிஸ்ட்டு கள்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருப்பது, சர்வதேச அளவில் அதிதீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிஸ்ட் சக்திகள், இடதுசாரிகளுக்கு எதிராகப் பயன் படுத்திடும் சொற்றொடராகும். அவர்களின் கூற்றின் படி, கலாச்சார மார்க்சிசம் என்பது ‘மேற்கத்திய நன்னெறி’ (‘western morality’) மற்றும் ‘நாகரிகம்’ (civilisation) ஆகியவற்றை ஒழித்துக்கட்டி, ‘அரசிய லில் ஓர் உயர்அடுக்கு கருத்தாக்கத்தை’ (‘elite con cept of political correctness’) உருவாக்குவதற் கான சதி (conspiracy) ஆகும்.
மோடி அரசாங்கம் இந்திய சமூகத்தையும், கலாச்சாரத்தையும் ‘ஒருநிலைப்படுத்திட’ (‘homog enise’) மேற்கொள்ளும் எதேச்சதிகார முயற்சிகளை யும், ஆர்எஸ்எஸ்-இன் பாசிஸ்ட் சித்தாந்தத்தையும் விமர்சித்துவரும் இடதுசாரி மற்றும் அனைத்து ஜன நாயக சக்திகளையும் கொச்சைப்படுத்துவதற்காக, ஆர்எஸ்எஸ் இந்த வார்த்தைகளைக் கடனாக வாங்கியிருக்கிறது. உண்மையில் ‘கலாச்சார மார்க்சிசம்’ என்று எதுவும் கிடையாது. “நாங்கள் 1920 களிலேயே மார்க்சிடமிருந்து விலகி வந்துவிட்டோம்” என்று இதனை மோகன் பகவத்தே ஒரு தடவை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
வெளிநாட்டு அதிதீவிர பிற்போக்கு வாதிகளிடம் கடன் பெற்ற சொற்களில்...
‘விழித்தெழு’ (‘woke’) இயக்கத்தைச் சேர்ந்தவர் கள், அல்லது ‘விழிப்படைந்திருக்கும்’ (‘awakened ones’) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்கூட, நிறவெறிக்கு (racism) எதிராகவும், பல்வேறு வகை யான சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறவர்களுக்கு எதிராகவும் போராடுகிறவர்க ளைத் தாக்குவதற்காக வலதுசாரிகள் பயன்படுத்தும் சொற்றொடர்களேயாகும். ஆனால், இங்கேயும்கூட, ‘விழித்தெழு’ இயக்க நடைமுறையை மார்க்சிஸ்ட்டுகள் பின்பற்றுவ தில்லை, மாறாக மேற்கத்திய நாடுகளில் பூர்ஷ்வா- தாராளவாதிகள் (bourgeois-liberals) பயன் படுத்துவதாகும். அங்கே அதிதீவிர பிற்போக்குவாதி கள் (ultra-conservative) பயன்படுத்தும் வார்த்தை களை இங்கே இந்தியாவில் ‘பாரதிய’ கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கும் இடதுசாரிகளைத் தாக்குவதற்காக மோகன் பகவத் நகலெடுத்து பின்பற்றி இருக்கிறார். மேலும், கல்வி முறையை காவிமயப்படுத்துவதற்கும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்குவ தற்கும் ஆர்எஸ்எஸ் மேற்கொண்டுவரும் முயற்சி களை நியாயப்படுத்துவதற்காகவும் இவ்வாறு பேசி யிருக்கிறார்.
கல்வித்துறையைப் போலவே, ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒடுக்கு முறைக்கு உட்படுத்த வேண்டும் என்பதையே ‘நியூஸ்கிளிக்’ தாக்கப்பட்ட விதத்திலிருந்து பார்க்கிறோம்.
ஒடுக்குமுறைக்கு எதிராக சமூக நீதிக்காகப் போராடுவது பிளவுவாதமாம்
ஆர்எஸ்எஸ் தலைவரின் உண்மையான இலக்கு இடதுசாரிகள்தான். சமீபத்தில் புனேயில் ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில் அவர் பேசும்போது, கல்வி அமைப்புமுறைக்குள்ளும், மற்றும் பல நிறுவனங்க ளுக்குள்ளும் ஊடுருவியிருக்கின்ற ‘இடதுசாரி சுற்றுச் சூழல் அமைப்பு’ (“Left ecosystem”)க்கு எதிராகப் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தி ருக்கிறார்.
ஆண்டாண்டு காலமாய் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த பல்வேறு சமூகக் குழுக்கள் தற்போது சமூக நீதிக்காகப் போராட முன்வந்திருப்பது குறித்து ஆர்எஸ்எஸ் கவலைப்படுவது அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. மேலும் அது, எந்த மாநில அரசாங்கமாவது அல்லது மாநிலக் கட்சியாவது தங்கள் மாநிலத்தின் அபிலாசைகளை வெளிப்படுத்தினால் அதனைப் பிளவுவாத சிந்தனை (divisive) என்ற முறையில் பார்க்கிறது. அதனால்தான் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை மற்றும் சச்சரவுகளுக்கு, வட கிழக்கு இந்தியாவில் பாஜக-வும் சங்கிகளும் மேற்கொண்டு வந்த குறுகிய அடையாள அரசியல் காரணம் அல்ல, மாறாக வெளிப்புற மற்றும் சீர்குலைவு (external and disruptive) சக்திகளே காரணம் என்று மோகன் பகவத் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
மோகன் பகவத்தின் குரலை எதிரொலித்த மோடி
இவ்வாறு மோகன் பகவத் கூறிய அதே கருத்துக்க ளைத்தான் அவர் கூறிய அதே நாளன்று தில்லியில் தசரா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது நரேந்திர மோடியும் எதிரொலித்திருக்கிறார். ‘சாதியம்’ (‘casteism’) என்ற பெயராலும் ‘பிராந்தியவாதம்’ (regionalism) என்ற பெயராலும் நாட்டைத் துண்டாட முயற்சிக்கும் சக்திகளைத் தோற்கடிப்பது பற்றி அவர் பேசியிருக்கிறார். உலகில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை தான் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நாட்டை சாதியத்தின் மூலம் பிளவுபடுத்துவதற்கு ஒரு கருவி யாக சாதிக் கணக்கெடுப்பு (caste census) கோரிக்கை வந்திருப்பதாக மோடி பார்க்கிறார்.
மோகன் பகவத் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருவருக்குமே, ராமர் கோவில் திறக்கப்படுவ தென்பது தேசிய மறுமலர்ச்சியின் சின்னமாகும். சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக, ‘கலாச்சார ஒற்றுமை’யின் சின்னமாக இதனை அவர்கள் முன்வைக்கின்றனர்.
இந்துத்துவா எதேச்சதிகார அரசை நிறுவ
மோகன் பகவத் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருவரின் பேச்சுக்களுமே, இந்தியாவை இந்துத்துவா எதேச்சதிகார அரசாக நிறுவ வேண்டும் என்பதற் கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே என்பதும், அதற்காகத்தான் அவர்கள் நாட்டில் தற்போதுள்ள கல்வி முறையையும் பன்முகக் கலாச்சார வலைப் பின்னலையும் ‘அன்னிய சிந்தனைகள்’ என்று கூறி அவற்றைக் களையெடுத்திட வேண்டும் என்றும் கூறி குறிவைத்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகும்.
இத்தகைய நாசகர நோக்கத்தை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காகவே ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்பது இப் போது முழுமையாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 25, 2023, தமிழில்: ச.வீரமணி